ஆனைமலை மாசாணியம்மன் காணிக்கை எண்ணிக்கை
ADDED :2322 days ago
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.இதில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா, புலவர் லோகநாதன் முன்னிலை வகித்தனர்.நிரந்தர உண்டியல்களில், 44 லட்சத்து, 49 ஆயிரத்து, 781 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், 14 லட்சத்து, 18 ஆயிரத்து, 772 ரூபாயும் காணிக்கை இருந்தது. மேலும், 290 கிராம் தங்கம் மற்றும் 335 கிராம் வெள்ளி இருந்தது.