கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED :2317 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் வைகாசி அமாவாசை நிகும்பலா யாகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்.நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதி, நாட்டு நலன், தோஷ நிவர்த்தி வேண்டி மிளகாய் வற்றல் கொண்டு பிரதி அமாவாசை தினத்தில் யாகம் நடத்தப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் (ஜூன்., 3ல்) வைகாசி அமாவாசையையொட்டி இரவு பத்ரகாளியம்மன், பெரியாநாயகி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந் தது. பெண் பக்தர்கள் குங்குமார்ச்சனை செய்தனர்.கோவிலில் நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமி களுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த நிகும்பலா யாகத்தில் மிளகாய் நெடி சிறிதும் இன்றி பக்தர்கள் தோஷ நிவர்த்தி செய்து பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.