திருநள்ளார் பிரம்ம தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
ADDED :2320 days ago
காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் பிரம்ம தீர்த்தக் குளம் துாய்மைபடுத்தும் பணி முடிவடைந்து தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.
காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வரர் கோவில், பரிகார ஸ்தலமாக விளங்குவதால், தினசரி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், நீராடிய பிறகே சனீஸ்வரரை வழிபட செல்வார்கள். இதற்காக கோவிலை சுற்றி நளம் குளம், சரஸ்வதி குளம் மற்றும் பிரம்ம தீர்த்தக்குளம் ஆகிய மூன்று குளங்கள் உள்ளது. இந்த மூன்று தீர்த்தங்களை கோவில் நிர்வாகம் மூலம் பராமரிக்கப்பட்டுவரகிறது.