உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம்

சோரியாங்குப்பம் மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம்

பாகூர்: பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பம் செடல் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று (ஜூன்., 7ல்)கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனையொட்டி, நேற்று (ஜூன்., 7ல்) காலை 9.00 மணிக்கு தென்பெண்ணையாற்றில் கரகம் வீதியுலா, 12.00 மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. தொடர்ந்து நடைபெறும் விழாவில், தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர் திருவிழா, வரும் 14ம் தேதி மாலை 3.00 மணிக்கு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !