அன்னூரில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
ADDED :2306 days ago
அன்னூர்:அன்னூரில் வரும் 3ம் தேதி மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடக்கிறது. மாணிக்க வாசகர் குருபூஜை விழா, அன்னூர், தென்னம்பாளையம் ரோட்டிலுள்ள சுப்பையா நகரில், 3ம் தேதி காலை 7:00 மணிக்கு துவங்குகிறது.புளியம்பட்டி, அண்ணாமலையார் திருக்கோவில் வழிபாட்டு மன்றத்தினர் பங்கேற்கின்றனர். காலையில் துவங்கி, மதியம் வரை, முழுமையாக திருவாசகம் வாசிக்கப்படுகிறது. சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அன்னூர் தமிழ்ச்சங்கம் சார்பில், விழா நடக்கிறது.