திருப்பரங்குன்றத்தில் மீண்டும் திருமஞ்சனம்
ADDED :2549 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சரவணப் பொய்கையிலிருந்து தினமும் அதிகாலை யானை மீது வெள்ளி குடத்தில் தீர்த்தம் எடுத்துவந்து கோயில் கொடிக்கம்பம், பலி பீடத்திற்கும் அபிஷேகம் (திருமஞ்சனம்) நடந்தது. பொய்கை நீர் மாசடைந்ததால் தீர்த்தம் எடுப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பொய்கை துாய்மைப்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் சில நாட்களாக தீர்த்தம் எடுத்துவரப்பட்டு அபிஷேகம் நடக்கிறது.