தினமும் 2 மணி நேரம் மவுனமாக இருங்கள்
* தினமும் இரண்டு மணி நேரம்மவுனமாகஇருங்கள்.
*எளிய வாழ்வு, உயரிய சிந்தனை வாழ்வின் லட்சியம் ஆகட்டும்.
*கருத்தைக் கேளுங்கள். மற்றவர் உணர்வுக்கு மதிப்பு
*உண்மை மட்டும் பேசுங்கள். மவுனம் பழகுங்கள். பேச்சில் இனிமை இருக்கட்டும்.
*உலகையே ஒரு குடும்பமாக கருதி, கிடைத்ததை பிறருக்கும் பங்கிடுங்கள்.
*எண்ணம், சொல், செயலால் யாருக்கும் துன்பம் தராதீர்கள்.
*குழந்தை முதல் பெரியவர் வரை தியானம் அவசியம்.
*தவறு செய்வோர் மீது கோபம் கொள்ளாதீர். பிறரது குற்றம், குறைகளை மன்னிக்கவும், மறக்கவும் பழகுங்கள்.
*பொறுமை, அன்பு, இரக்கம், அமைதி மிக்கவர்கள் தோல்வி கண்டு துவள்வதில்லை.
*பிறர் உதவியை நாடாமல் சொந்தக்காலில் நில்லுங்கள்.
*கடவுள் விரும்பும் வழிபாடு உழைப்பு. உழைப்பால் கிடைத்த பணத்தால் மற்றவருக்கு உதவுங்கள்.
*உபதேசம் கேட்பதை விட, பயனுள்ள பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.
*நியாயமான வழியில் சம்பாதியுங்கள். தவறான வழியில் கிடைக்கும் பணம், பொருளை ஏற்காதீர்கள். - சொல்கிறார் சிவானந்தர்