உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி அருகேயுள்ள வேட்டையன்பட்டி கோயில் ஆடித்திருவிழா

சிங்கம்புணரி அருகேயுள்ள வேட்டையன்பட்டி கோயில் ஆடித்திருவிழா

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகேயுள்ள வேட்டையன்பட்டி காமாட்சி  பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா நேற்று (ஜூலை., 25ல்) கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வேட்டையன்பட்டி விஸ்வகர்ம கைவினைஞர் சங்கம் மற்றும்  பொது மக்களால் 10 நாள் விழாவாக நடத்தப்படுகிறது. இக்கோயிலின்  ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11:00 மணிக்கு  காமாட்சி பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்க ளுக்கு காப்பு  கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் இரவு அம்மன் பல அலங்காரத்தில் கோயி லை  சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஜூலை 25ம் தேதி இரவு 7:00  மணிக்கு ஊஞ்சல் தரிசனமும், ஆகஸ்ட் 1ம் தேதி காலை பால்குடம் மாலை  5:00 மணிக்கு பூத்தட்டு திருவிழாவும் நடைபெறும், ஆகஸ்ட் 2ம் தேதி பகல் 3:00  மணிக்கு திருவிளக்கு பூஜையும் இரவு 8:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும்  நடைபெறும், ஆகஸ்ட் 3ம் தேதி காலை 11:00 மணிக்கு அன்னதானம்  நடைபெறும். விழா ஏற்பாடுகளை வேட்டையன்பட்டி விஸ்வகர்ம கைவினைஞர்  சங்கம் மற்றும் பொது மக்கள் செய்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !