உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கர லிங்கம் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தும்பைப்பட்டி சங்கர லிங்கம் கோயிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தும்பைப்பட்டி: மதுரை  மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம்  அருள் மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சங்கரநாரா யணர் கோவிலில் அருள்மிகு ஸ்ரீ கால பைரவர் சுவாமி க்கு  ஆடி மாத தேய்பிறை அஷ்டமி   சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு  24.07.2019 புதன்கிழமை நடைபெற்றது.    

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித் தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிஷேகம் நடைபெற்றது.  சுவாமி சந்தனக் காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் தயிர் சாதம்  பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர  நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !