உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குத்துக்கல்வலசை கோயிலில் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம்

குத்துக்கல்வலசை கோயிலில் 6ம் தேதி மகா கும்பாபிஷேகம்

தென்காசி : குத்துக்கல்வலசை சக்தி அம்பாள் கோயிலில் வரும் ஏப்.6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தென்காசி அருகே குத்துக்கல்வலசை சக்தி அம்பாள் கோயிலில் புதிதாக விமானம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நடந்தது. வரும் ஏப்.6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனை முன்னிட்டு 5ம் தேதி யாக சாலை பூஜை துவங்குகிறது. காலையில் விக்னேஷ்வர பூஜை, சங்கல்பம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலையில் தீர்த்த சங்கரஹணம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, எஜமானர் வர்ணம், ஆச்சார்ய வர்ணம், முதல் கால யாகசாலை பூஜை, இரவு யந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது. இரண்டாம் நாளான 6ம் தேதி அதிகாலையில் இரண்டாம் கால யாக சாலை பூஜை, ஸ்வரிசாகுதி, யாத்ரா தானம், கடம் எழுந்தருளல் நடக்கிறது. காலை 5.20 மணிக்கு மேல் 5.35 மணிக்குள் விமான மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதன் பின்னர் மூலஸ்தானம் சக்தி அம்பாளுக்கு மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கல் நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை சரவண சாஸ்திரி நடத்துகிறார். மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை முருகேசன் மற்றும் விழாக் கமிட்டியார் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !