ஆடி வெள்ளி அம்பாள் சிறப்பு அலங்காரம்
ADDED :2320 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு மூலவர் சிவானந்தவல்லி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், ஆடி வெள்ளிக் கிழமையை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை மூலவர் சிவானந்தவல்லிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் சிவானந்தவல்லி, பச்சை பட்டாடையில் மீனாட்சி அலங்காரத்தில் ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. உற்சவமூர்த்தி ஊஞ்சல் சேவையில் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.