உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் ரோப்கார் நிறுத்தம்

பழநியில் ரோப்கார் நிறுத்தம்

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு நேற்று ஞாயிறு விடுமுறை நாளில் அதிகாலை முதல் மலைக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். பலத்த காற்று காரணமாக ரோப்கார் அடிக்கடி நிறுத்தப்பட்டு இயங்கியது. இதனால் ஏமாற்றம் அடைந்த பக்தர்கள் வின்ச்சில் செல்வதற்கு 2 மணிநேரம் காத்திருந்து சிரமப்பட்டனர். பொது தரிசனவழியில் 2 மணி நேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு தங்கரதப் புறப்பாட்டில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர். பராமரிப்பு பணிகளுக்காக ரோப்கார் இன்று (ஜூலை.29) முதல் 45 நாட்கள் நிறுத்தப்படுகிறது. பக்தர்கள் வின்ச், படி, யானைப்பாதையை பயன்படுத்தும்மாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !