உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம் : சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவ தீ மிதி  உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பிரமோற்சவம் கடந்த  19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினம் மாரியம்மனுக்கு சிறப்பு  அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது.நேற்று முன்தினம் (ஜூலை., 29ல்) தீமிதி உற்சவத்தை யொட்டி அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. காலை சோதனை கரகம் புறப்பாடு செய்து, செடல் காவடி ஊர்வலம் நடந்தது.

மாலை அக்கினி சட்டி எடுத்து, மாரியம்மன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பாலமான் கரையில் இருந்து சக்தி கரகம்  புறப்பட்டு தீக்குண்டம் இறங்கும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். மாலை 6  மணிக்கு வசந்த மண்டபத்திற்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில்  சக்திக் கரகம் இறங்கியது.தொடர்ந்து ஆயிரக்கனக் கான பக்தர்கள் தீ மிதித்து  நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !