பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஆடிப்பூர விழா
ADDED :2566 days ago
பெரியகுளம்: பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. அம்மன் வளையல் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் வளையல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அர்ச்சகர்கள் கண்ணன், பாபு, செய்திருந்தனர்.