பொள்ளாச்சி கருப்பராயன் கோவிலில்,ஆண்டு விழா
ADDED :2300 days ago
பொள்ளாச்சி:பொள்ளாச்சி செட்டியக்காபாளையம் பாறைக்காட்டில் உள்ள நாகம்மன், கருப் பராயன் கோவிலில், ஆண்டு விழா இன்று (ஆக., 5ல்) நடக்கிறது. விழாவையொட்டி மாலை, 4:00 மணிக்கு மேல் பொங்கல் வைத்தல், காப்பு கட்டுதல், மாங்கல்யம் கட்டுதல், சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் நடக்கின்றன. தொடர்ந்து இரவு, 11:00 மணிக்கு தீர்த்தம் முத்தரித்தல், அம்மனை அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (ஆக., 6ல்) காலை, 6:00 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.