எதிரி தொல்லை நீங்க பரிகாரம்
ADDED :2260 days ago
வீட்டிலோ, பணியிடத்திலோ அறிந்தோ, அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் எதிரிகளாக கூட மாறுகின்றனர்.”நான் யாருக்கும் கெடுதல் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் இருக்கிறார்கள்?” என்று சொல்லி வருந்துவோர் பலர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமைகளில் 12 முறை சக்கரத்தாழ்வார் சன்னதியை வலம் வந்து வணங்குங்கள். துளசிமாலை சாத்தி, கல்கண்டு பிரசாதம் நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு கொடுங்கள். வீட்டில் யோகநரசிம்மர் படத்தை கிழக்கு நோக்கி வைத்து தினமும் மாலையில் தீபமேற்றுங்கள். ”யோக நரசிம்மம் சரணம் ப்ரபத்யே” என்று 108 முறை ஜபியுங்கள். பொறாமைக்காரர்களின் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடுவீர்கள்.