உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குறையில்லா வாழ்வு அமைய...

குறையில்லா வாழ்வு அமைய...

ரங்கநாதரின் தங்கையாக காவிரி அன்னை கருதப்படுகிறாள். ஆடிப்பெருக்கன்று ரங்கநாதர் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்திலுள்ள படித்துறைக்கு காலையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும்.  மாலையில் புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் முதலிய சீர்வரிசைகளை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து அம்மா மண்டபம் படித்துறைக்குக் கொண்டு வருவர். பெருமாள் முன்னிலையில் தீபாராதனை நடக்கும். அதன்பின் சீர்வரிசையை ஆற்றில் மிதக்க விடுவர். இந்தக் காட்சியை தரிசித்தால் குறையில்லா வாழ்வு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !