மனபலம் அதிகரிக்க மந்திரம்!
ADDED :2388 days ago
புத்தியை பலப்படுத்தினால் மனம் உறுதி பெறும். குழந்தைகளிடம் ’கடவுளே! எனக்கு நல்ல புத்தி கொடு’ என்று வேண்டும்படி அறிவுரை சொல்வர் பெற்றோர். காயத்ரி மந்திரத்தின் நோக்கம் இதுவே. காலை, பகல், மாலையில் திருநீறு அல்லது திருமண் இட்டு ’ஓம் நமசிவாய’ அல்லது ’ஓம் நமோ நாராயணாய’ என்று ஜபியுங்கள்.