சிவகங்கையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED :2415 days ago
சிவகங்கை:சிவகங்கையில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் செவ்வாடை உடுத்தி முளைப்பாரி, கஞ்சிய கலயம் சுமந்து ஊர்வலமாக சென்றனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. முளைப்பாரியுடன் நகரின் முக்கிய வீதிகளை சுற்றி, மீண்டும் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்திற்கு சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.