திருவெற்றியூரில் பூச்சொரிதல் விழா
ADDED :2348 days ago
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதழ் விழா நடந்தது. முன்னதாக பாகம்பிரியாள் அம்மன், வன்மீக நாதருடன் சந்தனகாப்பு அலங்காரத்தில் தோன்றினார். பின்பு நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி வீதி உலாவும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.