புதுச்சேரி விண்ணேற்பு ஆலய ஆடம்பர தேர்பவனி
ADDED :2359 days ago
புதுச்சேரி: நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நேற்று (ஆக., 15ல்) நடந்தது.
புதுச்சேரி நெல்லித்தோப்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சிறப்பு திருப்பலி நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று (ஆக., 15ல்) நடந்தது.
அதிகாலை 4.30 மணிக்கு பங்குதந்தை வின்சென்ட் தலைமையில் திருப்பலி, புதுச்சேரி மற்றும் கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. முதல்வர் நாராயண சாமி, எம்.எல்.ஏ.க்கள் சிவா, ஜெயமூர்த்தி ஆகியோர் தேர் பவனி யை தொடங்கி வைத்தனர். தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழி யாக சென்றது. பங்கு தந்தைகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.