உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப் பெருமாள் வீதியுலா

முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப் பெருமாள் வீதியுலா

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தார்.கடந்த ஆக.7–ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் ஆடித்திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. நாள்தோறும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும், கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. ஆக.13ல் திருக்கல்யாணம், ஆக.15ல் தேரோட்டம் நடந்தது. திருவிழாவில் இரவு நேரத்தில் பெருமாள் பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்று முன்தினம் நடந்தது.  சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்ட பெருமாளை நான்கு ரத வீதிகளிலும் காத்திருந்த பக்தர்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிப்பட்டனர். அதிகாலை சுவாமி சன்னதி திரும்பினார். ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறையினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !