நெல்லிக்குப்பம் மாரியம்மன் கோவிலில் சந்தன காப்பு அலங்காரம்
ADDED :2250 days ago
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் குடிதாங்கிசாவடி மாரியம்மன் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார்.நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி முத்துமாரியம் மன் கோவிலில் கடந்த வாரம் சாகைவார்த்தல் விழா நடந்தது. கடந்த 20ம் தேதி, உதிரம் துடைத் தல் நிகழ்ச்சியை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.