மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4906 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4906 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4906 days ago
பழநி: சரண கோஷத்துடன், பழநி பங்குனி உத்திர கொடியேற்றம் நடந்தது. ஏப்., 5 ல், தேரோட்டம் நடக்கும். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன் தினம் இரவு 7.30 மணிக்கு, பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து திருஆவினன்குடிக்கு, முத்துக்குமார சுவாமி எழுந்தருளினார். கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று, விநாயகர் பூஜை, அஸ்த்ர தேவர் காப்புக்கட்டுதல், கலச பூஜை நடந்தது. கொடிப்படம், திருஆவினன்குடி வெளிப்பிரகாரம் சுற்றி வந்தது. திருமுறை பாடல்கள் இசைக்க, காலை 9.55 மணிக்கு, சரண கோஷத்துடன் கொடியேற்றப்பட்டது. பெரியநாயகி அம்மன் கோயிலில் கால சந்தி பூஜையிலும், மலைக்கோயிலில் உச்சிக்காலத்திலும் காப்புக்கட்டப்பட்டது. வேணுகோபாலு எம்.எல்.ஏ., கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன், துணை கமிஷனர் மங்கையர்கரசி, சித்தனாதன் சன்ஸ் பழனிவேல், கந்தவிலாஸ் செல்வக்குமார், பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து பங்கேற்றனர். மாலையில் யாகசாலை, இரவு பலிபீட பூஜை நடந்தது. ஆறாம் நாளான ஏப்., 4 ல், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், 8 மணிக்கு வெள்ளித் தேரோட்டம் நடக்கும். மறுநாள் மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
4906 days ago
4906 days ago
4906 days ago