உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு

தும்பைப்பட்டி, சங்கர லிங்கம் கோயிலில் சிறப்பு வழிபாடு

மதுரை: மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் 23.8.19 வெள்ளியன்று தேய்பிறை அஷ்டமி சிறப்பு அலங்கார வழிபாடு, சங்கர நாராயணருக்கு, கோகுலாஷ்டமி சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது.   

சிறப்பு நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக  கால பைரவர் சுவாமிக்கும், சங்கர நாராயணர் சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு பஞ்சாமிர்தம், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி பக்தர்களுக்கு சங்கர நாராயணர் திருக் கோலத்தில்  விபூதி, சந்தனக் காப்பு அலங்கா ரத்தில் காட்சி அளித்தார். ரமேஷ் அய்யர்,  சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !