ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா
ADDED :2244 days ago
ஈரோடு: ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த, பிரதோஷ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், ஆவணி மாத பிரதோஷ விழா நேற்று 28 ல், நடந்தது.
மூலவர் சன்னதியின் முன்பு எழுந்தருளியுள்ள, நந்தீஸ்வர பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட, 16 விதமான திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. இதையடுத்து, விழா மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உமாமகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை, பிரகார உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.