ஓமலூர் மாரியம்மன் கோவிலில் ரூ.3.87 லட்சம் காணிக்கை
ADDED :2333 days ago
ஓமலூர்: தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், கடந்த மாதம், ஆடித்திருவிழா நடந்தது. அதற்காக, உண்டியல்கள் வைக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்(நகை சரிபார்ப்பு) குமரேசன் முன், நேற்று, 6ம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில், மூன்று லட்சத்து, 87 ஆயிரத்து, 929 ரூபாய், 23 கிராம் தங்கம், 398 கிராம் வெள்ளி இருந்தது.