உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி அருகே கொள்ளாபுரி அம்மன் திருவிழா

திருத்தணி அருகே கொள்ளாபுரி அம்மன் திருவிழா

திருத்தணி: திருத்தணி அடுத்த, காசிநாதபுரம் பகுதியில் உள்ள கொள்ளாபுரி  அம்மன் கோவிலில், நேற்று 8ல், ஆண்டு ஜாத்திரை நடந்தது.

விழாவையொட்டி,  காலை, 7:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  மற்றும் தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு, கூழ்  வார்த்தல், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில்,  திரளான பெண்கள், பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.இரவு,  7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன் வீதியுலா  வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !