உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாலையில் பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை

சிறுவாலையில் பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை

கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை  பாலேஸ்வரர் கோவிலில் நேற்று (செப்., 16ல்) சோமவார உச்சிகால பூஜை நடந்தது.

அதனையொட்டி, நேற்று (செப்., 16ல்) காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம பூஜையும், தொடர்ந்து உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்கேற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர் களுக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது.பூஜையில், சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் பகுதிகளில்  இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத்,  சிவாச்சாரியார் கோபி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !