பரமக்குடி உலக நாயகி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா
ADDED :2418 days ago
பரமக்குடி: பரமக்குடி அருகே பூவிளத்தூர் உலக நாயகி அம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா நடந்தது. மழை வேண்டி காப்பு கட்டிஏராளமான ஆண்களும், பெண்களும் முளைப் பாரியைசுமந்து சென்றனர்.
இளைஞர்கள், பெரியவர்கள்ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தனர். தொடர்ந்து தீச்சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவில்பூவிளத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.