உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லலிதா செல்வாம்பிகை கோவிலில் நாட்டியாஞ்சலி

லலிதா செல்வாம்பிகை கோவிலில் நாட்டியாஞ்சலி

செஞ்சி: செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி நாட்டியாஞ்சலி நடந்தது. செஞ்சி அடுத்த செல்லப்பிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் தினமும் நவராத்திரி மகா ஹோமம் காலை, மாலை வேளையில் நடைபெற்று வருகிறது.  அதனையொட்டி தினமும், சிறப்பு அபிஷேக, அலங்காரமும் மாலையில் மகா தீபாராதனையும் நடக்கிறது. 6ம் நாள் நிகழ்ச்சியில், சென்னை நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டியாஞ்சலி நடந்தது. அறங்காவலர் கன்னியப்பன் மற்றும் விழாக் குழுவினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !