கோயிலில் எடைக்கு எடை காசு கொடுப்பது ஏன்?
ADDED :2174 days ago
இதனை துலாபார காணிக்கை என்பர். துலா என்றால் தராசு. திருமணம், குழந்தைப்பேறு, உடல்நலம் வேண்டி இதனை நேர்ந்து கொள்வர். நாணயம், வெல்லம், பழம், தானியம் என காணிக்கை செலுத்துவர். விருப்பம் நிறைவேறியதும் துலாபாரம் செலுத்துவது அவசியம்.