உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் சஷ்டி தேரோட்டம்

திருப்பரங்குன்றத்தில் சஷ்டி தேரோட்டம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டியையொட்டி தேரோட்டம் நடந்தது.

நேற்று காலை 9:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் சட்டத் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார். அக், 28 முதல் விரதம் மேற்கொண்ட பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள், கிரிவலம் சென்று கோயில் முன் தேர் நிலை நிறுத்தப்பட்டது. கம்பத்தடி மண்டபத்திலுள்ள மயிலுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விரதம் மேற்கொண்ட பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதம் முடித்தனர். மதியம் மூலவருக்கு தங்கக்கவசம் சாத்துப்படியாகி 108 படி அரிசியில் தயாரான தயிர் சாதம் படைக்கப்பட்டு, அதன்மீது காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேதன தரிசனம் நடந்தது. இரவு சுவாமி வீதி உலா எழுந்தருளினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !