உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ரோப்காரில் தள்ளுமுள்ளு 3 மணிநேரம் காத்திருப்பு

பழநி ரோப்காரில் தள்ளுமுள்ளு 3 மணிநேரம் காத்திருப்பு

பழநி: பழநி கந்தசஷ்டி விழா திருக்கல்யாணம், விடுமுறையை முன்னிட்டு, பழநி ரோப்காரில் செல்ல, பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பழநி மலைக்கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, நேற்று (நவம்., 3ல்) திருக்கல்யாணம் நடந்தது. ஏழு நாட்களாக சஷ்டி விரதம் இருந்த பக்தர்கள் திருமணத்தை பார்த்தபின், விரதம் முடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதன் காரணமாக நேற்று (நவம்., 3ல்) உள்ளூர், வெளியூர் பக்தர்கள் குவிந்தனர்.

உள்ளூர் பிரமுகர்கள், போலீசார், அரசியல் கட்சியினர் ஆதிக்கம் காரணமாக ரோப்காரில் செல்ல தள்ளு முள்ளு ஏற்பட்டது. பக்தர்கள் 2 மணிநேரம் வரை காத்திருந்தனர். அன்னதானகூடம், பொது தரிசனம் வழியில் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். தங்கரதப் புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !