உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

நடுவீரப்பட்டு:சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில், நேற்று முன்தினம்,  (நவம்., 11ல்)பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத  ராஜராஜேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழா நடந்தது. விழாவை  முன்னிட்டு நேற்று முன்தினம் (11 ம் தேதி) திங்கள்கிழமை மாலை 4:00  மணிக்கு விநாயகர், ராஜராஜேஸ்வரர், ராஜராஜே ஸ்வரி, முருகர் மற்றும்  பரிவாரமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.மாலை 5:30  மணிக்கு பக்தர்கள் கோவிலின் மலை அடிவாரத்தை 16 முறை வலம் வந்து  சுவாமியை வழிபட்டனர். அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சிவபெருமாளுக்கு  அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. இரவு 8:00 மணிக்கு மகா  தீபாராதனை நடந்தது. 8:30 மணிக்கு ராஜராஜே ஸ்வரி அம்மன் ஆலய உலாவாக  வந்து ஊஞ்சலில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  அம்மனுக்கு ஊஞ்சலில் மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை நிர்வாக  அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !