உள்ளூர் செய்திகள்

திறமை

ஒரு படகு கடலில் ஏற்பட்ட புயலில் சிக்கி திசை மாறியது. படகோட்டிக்கு தாகம் வாட்டியது. அப்போது எதிரே ஒரு படகு வர தண்ணீர் கேட்பதற்காக வெள்ளைக் கொடியை வீசி அதை அழைத்தார். அந்தப் படகும் இவர்களை நெருங்கி வந்தது. தங்கள் நிலையைச் சொல்லி படகோட்டி தண்ணீர் கேட்டனர்.“நண்பர்களே! நீங்கள் கடலில் தான் இருக்கிறீர்கள். ஆனால் இப்போது இருப்பதோ கடலுக்குள் பாயும் அமேசான் நதியின் மீது உள்ளீர்கள். இது நல்ல தண்ணீர். நீங்கள் தாகம் தீர தண்ணீர் குடிக்கலாமே!” என்றனர்.கடலுக்குள் பயணித்தாலும், அதற்குள் நல்ல தண்ணீர் இருந்தும் படகோட்டிகளுக்கு விபரம் தெரியவில்லை. இது போல நமக்குள் பல திறமை இருந்தும் அதை நாம் உணர்வதில்லை.நம்பிக்கையை இழக்காமல் திறமைகளைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுங்கள்.