கேளுங்க சொல்கிறோம்
சு.விமலா, அகத்தீஸ்வரம், கன்னியாகுமரி.*தீபாவளி என்றால்...ஆவளி என்றால் வரிசை. தீபங்களை வரிசையாக ஏற்றுவது தீபாவளி.சி.சுதாமதி, மணலிபட்டு, புதுச்சேரி.*முன்னோரை தீபாவளியன்று வழிபடலாமா?தீபாவளியன்று அமாவாசை வந்தால், தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட வேண்டும். எம்.வனிதா, அடகூர், மைசூரு.*பட்டாசு வெடிக்கும் பழக்கம் எப்படி வந்தது?உல்காமுகம்' என்னும் தீப்பந்தத்தை வெடிக்கும் பழக்கம் புராண காலத்தில் இருந்தது. தற்போது அது பட்டாசாக மாறி விட்டது. ரா.கங்கா, பப்பன்கிளேவ், டில்லி.*தீபாவளிக்கும், திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?தொடர்பு இல்லை. ஆனால் இரண்டு நாளிலும் தீபம் ஏற்றுகிறோம். வெ.புனிதா, புளியரை, தென்காசி.*ராமாயணத்திற்கும் தீபாவளிக்கும் என்ன தொடர்பு?சீதையை மீட்டு ராமர் அயோத்திக்கு திரும்பிய நாள் தீபாவளி. அன்று தீபமேற்றி மக்கள் அவர்களை வரவேற்றனர். வி.நடராஜன், தேவகோட்டை, சிவகங்கை.*தீபாவளி, சுதந்திர தினம் - என்ன ஒற்றுமை...ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் சுதந்திர தினம். நரகாசுரனிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் தீபாவளி. என்.மணி, தொட்டிக்கலை, திருவள்ளூர்.*தீபாவளியன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது ஏன்?நரகத்தில் உள்ள முன்னோர் விடுபட தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கிறோம். கே.வினோத், கொடைக்கானல், திண்டுக்கல்*தீபாவளிக்கு புத்தாடை அணிவது ஏன்?நரகாசுரன் தன் இறப்பை புத்தாடையுடன் கொண்டாட வேண்டும் என கிருஷ்ணரிடம் வரம் பெற்றதால்... டி.லட்சுமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர்.*தீபாவளியன்று சுமங்கலிகள் விரதமிருப்பது ஏன்?தம்பதி ஒற்றுமைக்காக கேதாரகவுரி விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர்.