கேளுங்க சொல்கிறோம்
கே.ஆர்.பிருந்தா, பிராட்வே, சென்னை.*தீபாவளிக்கும் திருக்கார்த்திகைக்கும் என்ன தொடர்பு?இரண்டுமே தீபத்தை போற்றும் விழாக்கள். தீபாவளி முதல் திருக்கார்த்திகை வரை தினமும் விளக்கேற்றி குபேர லட்சுமியை வழிபடுவது நல்லது. சி.ஆர்த்தி, கும்முடிப்பூண்டி, திருவள்ளூர்.*முதன் முதலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றியது யார்? ஏன்?முதன்முதலில் ஏற்றியவள் பார்வதி. தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பெற்றதற்காக திருக்கார்த்திகையன்று தீபமேற்றினாள். வி.சந்தோஷ், தொட்டபள்ளாபுரா, பெங்களூரு.*திருவண்ணாமலையின் சமீபகால ஞானிகள் யார்? ரமணர், யோகிராம் சுரத்குமார் ஆகியோர்.கே.புனிதவதி, நிலக்கோட்டை, திண்டுக்கல்.*தீபமங்கள ஜோதி நமோநம என பாடியவர் யார்?பழநி திருப்புகழில் அருணகிரிநாதர் இப்படி முருகனைப் பாடியுள்ளார். ஆர்.ராஜாமணி, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.*திருக்கார்த்திகையன்று அண்ணாமலையாரை வழிபடுவது ஏன்?தன் கணவர் சிவனின் உடலின் இடது பாகத்தை பார்வதி பெற்றதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் ஜோதிவடிவில் சிவனை தரிசித்ததும் திருக்கார்த்திகையன்று தான். இதனால் அண்ணாமலையாரை வழிபடுகிறோம். கே.பிரவின், ரஜோரி கார்டன், டில்லி.*கோயில்களில் சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?சொக்கப்பனை என்றால் 'சொக்க வைக்கும் அழகு'. ஜோதி வடிவில் அண்ணாமலையார் காட்சியளித்ததை கொண்டாடும் விதமாக பனை மட்டை, தென்னங்கீற்றுகளை குவித்து வைத்து கொளுத்துகிறோம். ஜி.மீனா, விளாத்திகுளம், துாத்துக்குடி.*பூஜையின் போது சொல்ல முருகன் ஸ்லோகம் சொல்லுங்கள். கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லுங்கள். “உமா கோமள ஹஸ்தாப்யாம் ஸம்பாவித லலாடகம்ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்” ஆர்.கோகிலா, மார்த்தாண்டம், கன்னியாகுமரி.*திருக்கார்த்திகை தீபம் உணர்த்தும் தத்துவம் என்ன?ஒரு தீபத்தில் இருந்து பல தீபங்களை ஏற்றினாலும் ஒளி குறையாது. அது போல உயிர்களுக்கு எல்லாம் அருளை வழங்கினாலும் கடவுள் எப்போதும் முழுமையாக இருப்பவர் என்பதை தீபம் உணர்த்துகிறது. எல்.சிவனேசன், காட்டுமன்னார்கோவில், கடலுார்.*செம்பொருள் என்னும் சொல் முருகனைக் குறிக்குமா?முருகு என்பதற்கு அழகு, இளமை, செம்மை எனப் பொருள். இதனால் இச்சொல் முருகனைக் குறிக்கும். எல்.மீனாட்சி, உச்சிப்புளி, ராமநாதபுரம்.*இல்லக விளக்கு என்றால் என்ன.ஓம் நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரமே.