கேளுங்க சொல்கிறோம்
எம்.பூர்ணிமா, பொன்னேரி, திருவள்ளூர். *அன்பான அம்பிகை ஏன் காளியாக அவதரித்தாள்?தீயசக்திகளை அடக்கும் போது சாந்தமான அம்பிகை, உக்கிர வடிவில் காளி ஆகிறாள். ஆர்.வைஷ்ணவி, திரிவேணிபுரி, டில்லி.*சிவனைப் போல அம்மனுக்கும் நந்தி வாகனம் இருப்பது ஏன்?சிவனும், சக்தியும் இணைந்திருக்கும் கோயில்களில் அம்மனுக்கு நந்தி இருக்கும். அம்மனுக்கான தனிக்கோயில்களில் சிங்கம் இருக்கும். வி.கீர்த்தனா, பாகனேரி, சிவகங்கை. *வாசலில் கடவுளின் உருவத்தை கோலமிடலாமா?கடவுளின் மீது நம் கால்கள் படலாமா... நீங்களே சொல்லுங்கள். எல்.ஆர்த்தி, பள்ளியாடி, கன்னியாகுமரி. *ஹோமத்தில் இட்ட நாணயங்களை எங்கு வைக்க வேண்டும்?பணம் வைக்கும் பீரோவில் வைப்பது நல்லது. வி.எல்.சாந்தகுமார், கல்வராயன்மலை, கள்ளக்குறிச்சி. *கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம் பாடியவர்கள் யார்?கந்தசஷ்டி கவசம் - தேவராய சுவாமிகள்.கந்தகுரு கவசம் - சாந்தானந்த சுவாமிகள்ஜி.ராம் கிஷோர், கோத்தகிரி, நீலகிரி. *சுபநிகழ்ச்சியின் போது காப்பு கட்டுவது ஏன்?திருமணம், கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் போது அதை நடத்துவோரின் பாதுகாப்புக்காக கடவுளை வழிபட்டு காப்பு கட்டுகின்றனர். எஸ்.ஆனந்தன், சன்னபட்னா, பெங்களூரு. *கோயில் நிலைப்படியைத் தாண்டித்தான் செல்ல வேண்டுமா...நிலைப்படியை தொட்டு வணங்குவது அவசியம். கே.காருண்யா, தேவதானப்பட்டி, தேனி.*சித்தர்களின் ஜீவசமாதிகளை அமாவாசை, பவுர்ணமியன்று தான் தரிசிக்கணுமா?இல்லை. எப்போதும் தரிசிக்கலாம். பி.பார்த்திபன், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி. *என் தாயார் பூஜித்த விக்ரகங்களை எளிய முறையில் தினமும் பூஜிக்கலாமா?தினமும் பூக்கள் சாத்தி பால் நைவேத்யம் செய்யுங்கள். வெள்ளி அல்லது ஞாயிறன்று பால் அபிஷேகம் செய்யுங்கள். ஆர்.தாமோதரன், பிராட்வே, சென்னை.*எனக்கு வயது 84. தரையில் உட்கார முடியவில்லை. நாற்காலியில் அமர்ந்து சந்தியாவந்தனம் செய்யலாமா?செய்யலாம். தர்மத்தைக் காப்பாற்றுவதற்கு நன்றி. வருங்கால சந்ததிக்கு நல்வழி காட்டுகிறீர்கள்.