கேளுங்க சொல்கிறோம்
சி.நிஜந்தன், பிராட்வே, சென்னை.*பசுவுக்கு கீரை கொடுத்தால்...முன்வினை பாவம் போவதோடு சத்தான பாலும் கிடைக்கும். இதை 'யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை' என்கிறது திருமந்திரம். வி.வேல்முருகன், ஸ்ரீவைகுண்டம், துாத்துக்குடி.*பூர்ண கும்ப மரியாதை என்கிறார்களே...துறவி, சான்றோருக்கு வழங்கும் கவுரவம் இது. பூரணம் என்றால் 'முழுமை'. நிறைகுடத்தை ஏந்தி மங்களகரமாக வரவேற்பதே இதன் நோக்கம். பி.விஜய்சாரதி, ஹலசூரு, பெங்களூரு.*அதிகாலையில் நல்ல கனவு வந்தால் அதன் பின் துாங்கக் கூடாதாமே...துாங்கக் கூடாது. நீங்கள் கண்ட கனவு பலிக்க அதற்கான முயற்சி அவசியம். கடவுளின் அருள் இருந்தால் வெற்றி நிச்சயம். ஆர்.சுஜாதா, சிங்கம்புணரி, சிவகங்கை.*சுதர்சன ஹோமம் என்பது என்ன? மகாவிஷ்ணுவின் ஆயுதமான சுதர்சனத்தை பூஜிப்பது சுதர்சன ஹோமம். நோய், வழக்கு, பயம், திருஷ்டி போக்க இதை நடத்துவர். ஆர்.மேனகா, துவாரகா, டில்லி.*செடியிலிருந்து உதிர்ந்த மலர்களை பூஜைக்குப் பயன்படுத்தலாமா?செடியில் இருந்து பறிப்பது நல்லது. பவளமல்லி மலர் மட்டும் விதிவிலக்கு. கே.பாரதி கண்ணன், திங்கள்நகர், கன்னியாகுமரி.*நலமுடன் வாழ தினமும் என்ன செய்யலாம்?அவரவர் வழக்கப்படி நெற்றியில் திருநீறு, குங்குமம், திருமண் இட்டு கோயிலுக்குச் செல்லுங்கள். மனநலம், உடல்நலம், நீண்ட ஆயுளை பெறுவீர்கள். எம்.இந்துமதி, பெதப்பம்பட்டி, திருப்பூர்.*படுக்கையறையில் சுவாமி படங்கள் இருக்கலாமா?சுவாமி படங்கள் இருக்கக் கூடாது. எம்.சந்தோஷ், நத்தம், திண்டுக்கல்.*அர்ச்சகரிடம் விபூதி வாங்கலாமா அல்லது பூசச் சொல்லலாமா?அர்ச்சகரிடம் விபூதி வாங்குவது நல்லது. கே.வத்சலா, பெண்ணாடம், கடலுார்.*சமையல் தொடங்கும் முன் நீராடுவது அவசியமா...அன்னபூரணியின் இருப்பிடம் சமையலறை. நீராடிய பின் அன்னபூரணியை வணங்கிய பின் சமையுங்கள். எஸ்.கவிதா, ஆலந்துார், செங்கல்பட்டு. *மோட்சதீப வழிபாடு நடத்துவது ஏன்?இறந்தவரின் ஆன்மா கடவுளின் பாதத்தைச் சேர முப்பதாவது நாளில் மோட்ச தீபம் ஏற்றுகிறோம்.