நேர்மையாக இரு
UPDATED : நவ 17, 2023 | ADDED : நவ 17, 2023
நவ.17 நினைவு நாள்* நேர்மையாக வாழ்ந்தால் உனக்கு மகிழ்ச்சி என்னும் பரிசை கடவுள் தருவார்.* உலகில் மோசமான வேலை என்று எதுவும் இல்லை. * எந்தவொரு உணர்ச்சியையும் அடக்காதே. மீறினால் அது முன்பைவிட பல மடங்கு அதிகரிக்கும். * வீணாக பொழுதை போக்காமல் எதிர்காலத்திற்கு உண்டான பணிகளில் ஈடுபடு. * பிறரை மாற்ற விரும்பினால் முதலில் உன்னை மாற்றிக்கொள். * கடமைகளை சரியாக செய்தாலே போதும். அதுதான் கடவுளுக்கு அளிக்கும் சிறந்த காணிக்கை.* வாழ்வில் சுக, துக்கம் கலந்துதான் இருக்கும். இதை நினைத்து கவலைப்படாதே. * எதற்காகவும் பயப்படாதே. எப்போதும் கடவுள் உன்னுடன் இருப்பார். * எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டு. பிறகு சாப்பிடு. * அன்பு நடமாடும் கலைக்கூடமாக உன் மனதை வைத்துக்கொள். * எந்தவொரு விஷயத்தையும் அமைதியுடன் அணுகுவதே வலிமையின் அடையாளம். * எதிர்பார்ப்பு இல்லாத பக்தியே மேலான மகிழ்ச்சியைத் தரும்.* ஒழுக்கம் என்பது உனது வளர்ச்சிக்கான ஒரு வழிமுறை. அதை உயிராக கருது. * உண்மை, நேர்மை என்று மனதை துாய்மையாக வைத்திரு. என்கிறார் ஸ்ரீஅன்னை