பிடித்த வேலையைச் செய்
செப்.8 பிறந்தநாள் * பிடித்த வேலையைச் செய்தால் மனம் சந்தோஷப்படும். * கடவுளின் அருள் இன்றி உலகில் எதுவும் நடப்பதில்லை. * நீ எந்த நிலையில் இருந்தாலும் அதுபற்றி கவலைப்படாதே.* எவ்வளவு வேகமாக ஆணவம் அழிகிறதோ, அவ்வளவு வேகமாக நல்ல வாழ்க்கை அமையும்.* கருணையே உயர்வான குணம். ஆன்மிகமே மேலான ஞானம். * நல்லவர் நட்பும், நல்ல நுால்களும் பிறவி என்னும் கடலை தாண்டிச் செல்ல உதவும். * மன உறுதியை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காப்பாற்றும்.* பெயர், புகழ், பேராசையை விட்டால் உண்மையான அன்பை உணர முடியும். * எண்ணம், பேச்சு, செயல் என மூன்றிலும் துாய்மையைக் கடைபிடி. * தேவையைக் குறை. திருப்தியாக வாழு. * எதற்கும் பிறரை நம்பி இருக்காதே. உனது தேவையை நீயே செய். * பிறரது உணர்ச்சிகளை புண்படுத்தாமல் இருப்பதே ஒழுக்கம்.* நல்லவர்கள் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடு. * பழி வாங்கும் எண்ணத்தை கைவிடு. * தவறுகளைத் திருத்திக் கொள். * மன அமைதிக்கு அடிப்படையான விஷயம் உடல்நலம். என்கிறார் சிவானந்தர்