உள்ளூர் செய்திகள்

நாத்திகரோடு உறவாடாதே

ஏப்.21 - ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்* நாத்திகர்கள், கொடுமையாளர்களுடன் நட்போ, உறவோ கூடாது. * கடலில் சங்கமிக்கும் ஆறுகள் போல பக்தர்கள் கடவுளுடன் ஐக்கியம் அடைவர். * எங்கிருந்தாலும் கடவுளின் கண்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. * நல்ல குருநாதரை சரணடைந்தால் நம் வாழ்வு சிறக்கும்.* உண்மையான பக்தர்களின் வீட்டில் பற்றாக்குறை என்பதே இருக்காது.* அறிவை மறைக்கும் அறியாமை என்னும் திரையை கிழித்தெறியுங்கள்.* அகந்தையை அகற்றினால் கடவுளின் அருள் கிடைக்கும். * குருநாதரின் கருணை என்னும் மருந்து அறியாமையைப் போக்கும். * கடவுள் நம்பிக்கையை விட குருபக்தியே மேலானது.* கடவுளை முழுமையாக சரணடைந்தால் ஆசை நெருங்காது. * எது வேண்டுமானாலும் கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.* உலக விஷயங்களில் ஈடுபட்டு பெருமைப்படுவது போலி கவுரவம். * கடவுளின் திருவடியைச் சரணடைவதே உண்மையான கவுரவம்.* பசித்திருப்போருக்கு இரக்கமுடன் உணவளியுங்கள். எச்சரிக்கிறார் ஷீரடி சாய்பாபா