கவலைப்படாதே... தைரியமாக செயல்படு
* கவலைப்படுவதால் எந்தப் பிரச்னையும் தீராது. அதை தீர்க்கும் முயற்சியில் இறங்கு. * உடல் என்பது கோயிலுக்குச் சமம். அதை துாய்மையாக வைத்திரு. * படிப்பு, பணத்தால் தற்பெருமை கொள்ளாதே. மீறினால் அது அழிவைத் தரும். * மனம் அமைதியாக இருந்தால் முகம் பிரகாசமாக மாறும். * எப்போதும் தைரியமாக செயல்படு. வெற்றி பெறுவது எளிது. * எல்லோரிடமும் அன்பாக இரு. அதுவே மகிழ்ச்சி. * பக்தி செலுத்துவது, ஞானத்தை அடைவது ஆகிய இரண்டும் பெருஞ்செல்வம். * துன்பத்தை அனுபவித்தால் மட்டுமே சுகத்தின் அருமை தெரியும். * நீ செய்யும் தவறை திருத்திக் கொள். அது மீண்டும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள். * அறிவுக்கு முற்றுப்புள்ளியே கிடையாது. தினமும் அறிவை விரிவுசெய். * தியானத்தில் ஈடுபடு. கடவுளின் அருள் கிடைக்கும். * நம்பிக்கை, நல்ல செயல், ஒழுக்கம் ஆகியவை வெற்றிக்கான வழிகள்.* தர்மம் என்பது தாய். நிர்வாகம் என்பது தந்தை. * ஒழுக்கம், நேர்மையானவர்களால் சமுதாயம் நன்மை அடையும். * சுதந்திரம் இல்லாத நாடு உயிர் இல்லாத உடல். * கடவுளை தாயாக கருதினால் அவருக்கும் உனக்கும் இடையே நெருக்கம் கூடும். என்கிறார் ராஜாஜி