மன்னிப்பது கோழைத்தனமா
UPDATED : ஏப் 24, 2021 | ADDED : ஏப் 24, 2021
ஏப்.25 - மகாவீர் ஜெயந்தி* மன்னிப்பது கோழைத்தனம் அல்ல. அது தைரியத்தால் அலங்கரிக்கப்பட்ட மாலை. * மற்ற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வதே உண்மையான வீரம். * சுதந்திரமாக வாழும் உரிமை எல்லா உயிர்களுக்கும் உண்டு. * நாம் செய்யும் எந்த செயலும் நற்செயலாக இருப்பது அவசியம். * சுயக்கட்டுப்பாடும் அமைதியும் தான் ஆன்மிக வெற்றிக்கு வழிவகுக்கும். * தேவைக்கு அதிகமாக சேர்த்த செல்வம் பயனற்றுப் போகும். * பிறர் எப்படி நடக்க ஆசைப்படுகிறீர்களோ நீங்களும் அப்படியே இருங்கள். * தீய எண்ணங்களே அத்தனை துயரங்களுக்கும் காரணம். * ஏமாற்றுதல் என்பது சிறிய முள், அதைப் பிடுங்கி எறிவது கடினம். * உண்மையின் பாதையில் நடப்பவருக்கு உபதேசம் தேவையில்லை. * அகந்தை அழிந்தால் அடக்கம் தானாக வரும். * கொல்லாமை, ஒழுக்கம் இரண்டும் அறத்தின் ஆணிவேர். * பிறருக்கு மனமுவந்து கொடுப்பவர்கள் சொர்க்கம் செல்வர். * தியானத்தால் மனம் துாய்மையாகும். * தியான பயிற்சியால் துன்பக்கடலை எளிதாக கடக்கலாம்.மறுக்கிறார் மகாவீரர்