காலம் அறிந்து செயல்படு
* உலகத்தை வசப்படுத்த விரும்பினால் ஏற்ற காலம், தக்க இடத்தை அறிந்து செயல்பட வேண்டும். * கல்வி ஒன்றே அழியாத செல்வம். மற்றவை அழிந்து விடும்.* எந்தப் பொருள் மீது ஒருவனுக்கு ஆசை இல்லையோ அதனால் எந்த துன்பமும் ஏற்படாது.* பொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொற்களைத் தவிர்ப்பதே தர்ம வாழ்வின் அடிப்படைகள். * பணத்தைக் கொண்டு பிறருக்கு உதவாமல், அதன் மீதுள்ள ஆசையால் செல்வம் சேர்ப்பவன் அதை இழப்பான். * சாப்பிட்ட உணவு செரித்த பின், பசித்து உண்பவனுக்கு மருந்தே தேவைப்படாது. * மருத்துவர் என்பவர் நோய் இன்னது, அதற்கான காரணம் எது என்பதை அறிந்து அதை போக்குவதில் தவறு நேராமல் விழிப்பாக இருக்க வேண்டும். * நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருத்துவ முறைகள் நான்கு வகைப்படும். * செயலில் உறுதி என்பது ஒரு செயலை நடைமுறைப் படுத்துபவரின் மனதில் இருக்கும் உறுதித்தன்மையே ஆகும்.* கடைசி வரை தளராமல் முயற்சியில் ஈடுபடுவதே சிறந்த ஆளுமை. இடையில் தளர்ச்சி ஏற்பட்டால் அது துன்பத்தில் முடியும். * பகைவருக்கு அஞ்சாமை, வறியவருக்கு உதவுதல், வரும் முன் காத்தல், ஆபத்து காலத்தில் மனம் தளராமை ஆகியவை ஆட்சியாளர்களின் இயல்பாக இருக்க வேண்டும்.வழிகாட்டுகிறார் வள்ளுவர்