உண்மையைச் சொல்லி நல்லதைச் செய்வோம்
* எப்போதும் உண்மை பேசுங்கள். நற்செயலில் மட்டும் ஈடுபடுங்கள். * கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். உலகம் உங்களை மதிக்கும். * அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு கொண்டவன் தெய்வ இயல்பை பெறுகிறான்.* தினமும் கடவுளை வணங்காவிட்டால் அருள் உணர்வு இல்லாமல் போகும்.* ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர். அனைவரும் சமம்.* பசித்தவருக்கு உணவு அளிப்பதோடு தேவையான உதவியும் செய்ய வேண்டும்.* முற்பிறவியின் புண்ணியத்தால் மனிதப்பிறவி கிடைத்துள்ளது. அதைப் பொறுப்புடன் காப்பது நம் கடமை.* கற்கண்டை ருசித்தவன் கருங்கல்லை விரும்பமாட்டான். கடவுளை அறிந்தவன் மற்றதை விரும்ப மாட்டான். * கடவுளை அறிந்தால் கவலை, துன்பம் நேராது. * கையில் ஜபமாலையும், வாயில் மந்திரமும் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்.* பொய்மையை நம்பாதீர்! வஞ்சகர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்!* நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படக் கூடாது. தானம் கொடுப்பவரை தடுக்கக் கூடாது.* நம்பியவனுக்கு வஞ்சகம் செய்வது நல்லதல்ல. மற்றவர் வயிறு எரிய தீமை செய்வது கூடாது.* இல்லை என கேட்போருக்கு உதவ வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.சொல்கிறார் வள்ளலார்