ஒருவருக்காவது மகிழ்ச்சியைக் கொடு! வேண்டுகோள் விடுக்கிறார் சாரதாதேவியார்
* இறைவனுக்கும் அவனது அடியார்களுக்கும் பணக்காரன் தனது பணத்தின் மூலமும், ஏழை, இறைவனின் திருநாம உச்சரிப்பின் மூலமும் தொண்டு செய்ய வேண்டும்.* தவறுகள் மனித இயல்பு, அதைப் பெரியதாக எண்ண வேண்டுவதில்லை. அதனை மீண்டும், மீண்டும் நினைப்பதால் துன்பமே ஏற்படுகிறது.* ஒரு நாளில் 24 மணிநேரமும் பிரார்த்தனையில் செலவழிக்க முடியாது. பணிபுரிவதில் நிறைய நேரத்தைச் செலவிட்டால், அதுவே மனம் தூய்மையடைய வழி வகுத்து விடுகிறது.* இறைவனின் விருப்பத்தாலேயே அனைத்து விஷயங்களும் நடக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மனிதன் செயலாற்றினால் தான் இறைவனின் விருப்பம் வெளியாகிறது.* இறைவனை நேசிப்பதில் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இறைவனை மட்டும் நேசிப்பவன் புண்ணியவான்.* வாழும் உயிர்களில் ஏதாவது ஒன்றுக்காவது மன மகிழ்ச்சியை அளித்தால் உன் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறிவிட்டது என்று பொருள்.* நம்பிக்கையும், உறுதியுமே அடிப்படை, இவை இரண்டும் வாழ்க்கையில் இருந்தால் அனைத்தும் இருந்ததற்கு சமமாகும்.* மனம் அமைதி பெற பிறர் குற்றங்களைக் காணாதீர்கள். உங்கள் குறைகளை எண்ணிப்பாருங்கள். உலகம் முழுவதும் அன்பினால் சொந்தமாக்கிக் கொள்ளுங்குள். உலகில் எவரும் அந்நியரல்ல, உலகம் உங்களுடையது. * ஜெபம், தவம் முதலான சாதனைகளில்லாமல் மனம் தூய்மை அடையாது. தூய மனத்தாலன்றி இறைவனை அறியவும் முடியாது.