ஒன்று எங்கள் ஜாதியே!
UPDATED : பிப் 12, 2021 | ADDED : பிப் 12, 2021
* கடவுளின் பிள்ளைகளான நாம் அனைவரும் ஒரே ஜாதியே. * யாரிடமும் உயர்வு, தாழ்வு காட்டாதீர். அனைவரும் நம் சொந்தமே.* செல்வம் ஓரிடத்தில் நில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கும். * கடவுள் ஒருவரே உலகில் என்றென்றும் நிலையானவர்.* நான் நல்லவன் என கர்வப்பட வேண்டாம். உங்களை விட நல்லவர்களும் உலகில் இருக்கிறார்கள்.* பிறரை இழிவாக கருதுபவன், தன் நிலையில் இருந்து தாழ்ச்சி அடைவான். * அறிவாளிக்கு பிறர் மீது பொறாமையோ, பொருள் ஆசையோ ஏற்படாது. * பிறரது குறையை சிந்திப்பவன் பாவி. தன்னை உணர்ந்து மகிழ்பவன் ஞானி.* பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தர்மம் செய்யாதீர். * மனித நேயத்துடன் பிறருக்கு இயன்ற அளவில் உதவுங்கள். * எப்போதும் கடவுளை சிந்தித்தால் நிம்மதியுடன் வாழலாம்.* பொன், மண், பெண், புகழ் ஆசைகளில் சிக்கியவர்கள் மீள்வது கடினம்.ஒன்றுபடுத்துகிறார் சாந்தானந்தர்