உள்ளூர் செய்திகள்

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

* சத்தியத்தை விடாப்பிடியாய் பிடித்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் எதிரியின் மனதைக் கூட மாற்றும் சக்திகிடைக்கும். ஆனால், இதற்கு அசைக்க முடியாத நம்பிக்கை அவசியம்.* கடவுளிடம் முழுமையாக சரணடைந்தால் மட்டுமே, அகில உலகத்தையும் தன்னுள் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகும்.* இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவினால் மட்டும் போதாது. ஏற்றத்தாழ்வு இல்லாத சமத்துவமும் உண்டாக வேண்டும். * மனிதனுக்கு ஒழுங்கும், கட்டுப்பாடும் மிகவும் அவசியமானவை.* ஒவ்வொரு வீட்டாரும் ஒரு பிடி தானியத்தை தர்மம் செய்ய வேண்டும். அதையும் வீட்டிலுள்ள சிறு குழந்தைகளின் கையால் அளிக்க வேண்டும்.* கடவுள் எங்கும் நிறைந்திருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. * தனிமையில் குகையில் அமர்ந்து தவம் செய்வதை விட, பலர் சேர்ந்து கூட்டாக கடவுளை வழிபடும் முறையே மேலானது.* ஆண்களைத் தீய வழியில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தும் சக்தி பெண்களுக்கு இருக்கிறது.* உலகம் எங்கும் சாந்தி நிலவ வேண்டும் என நாம் பிரார்த்திப்போம். உலக அமைதியை விரும்பும் வீரர்களும், சேவையாற்றும் தொண்டர்களும் மிகவும் தேவை. * பக்தி மார்க்கத்தில், குருட்டுத்தனமான நம்பிக்கை கள் மலிந்திருப்பது வருத்தத்திற்குரியதாகும்.* யாரையும் இம்சிக்காமல் அகிம்சை வழியில் உயிர் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை.* தியானம் செய்து கடவுளை வழிபடுவதே சிறந்த வழிபாடு.* ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே திறமை அதிகம். ஒரு செயலை ஏற்றுக் கொண்டால், அதை எப்பாடு பட்டாவது முடித்துவிடும் தகுதி அவர்களுக்கு உண்டு.* சத்தியத்தை வற்புறுத்துவதன் மூலம் யாரிடமும் திணிக்க முடியாது. சத்தியத்தை யாராலும் மறைக்கவும் முடியாது. * அறிவுக்கண் திறக்கும் வரை சத்தியத்தை யாராலும் <உணர முடிவதில்லை.* தாய்மைப்பண்பு இருப்பதால், பெண் குலத்திற்கே தயை, அன்பு, கருணை, பாசபந்த உணர்வுகள் அதிகமாக இருக்கிறது.* கருணை என்பது பேராற்றல் மிக்க குணம். கடவுள் உணர்வு உள்ளவனிடம் உள்ளத்திலிருந்து கருணை பொங்கி வழியும்.* உலக மக்களின் உள்ளத்தில் எல்லாம் அச்சம் மண்டிக் கிடக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.* சூரியன் பாரபட்சம் இல்லாமல், எப்படி எல்லோருக்கும் தன் உஷ்ணத்தையும், ஒளியையும் வழங்குகிறதோ, அதுபோல அனைவரையும் சமமாக நடத்துபவனே அகிம்சாவாதி. * பொருளைத் திருடினால் திருடன் என்று உலகம் கருதுகிறது. அதுபோல, பொருளைக் குவித்து வரும் செல்வந்தனும், தன்னிடம் இருப்பதை பிறருக்கு கொடுக்க மறுக்கும் கருமியையும் திருடனாகவே கருதப்பட வேண்டும். * பிறருக்கு கொடுத்து மகிழ்வதில் தான் உண்மையான இன்பம் இருக்கிறது. அதனால், நம்முடைய செல்வமும் பெருகும். தன்னுடையது என்று உரிமை கொண்டாடும் எண்ணத்தால் துன்பமே உண்டாகும். சொல்கிறார் வினோபாஜி